5:42 PM | Posted in ,
கடந்த இரண்டு மாதங்களாக அடைக்காக்கச் சென்றிருந்த இந்த மாடப்புறா இன்றிலிருந்து மீண்டும் சிறகடிக்கத் தொடங்குகிறது (இதைச் சொல்வதற்கு வளவளவென்று நீண்ட பதிவையா எழுதனும்?).




தமிழீழ விடுதலைப்போரில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கும், தமிழீழ மண்ணில் வீர வித்தாக விதைக்கப்பட்டிருக்கும் விடுதலைப்போரளிகளுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்களையும் சோகங்களையும் பகிர்ந்து கொள்ளவும், இலங்கை அரசின் இன அழிப்பைக் கண்டிக்கவும் நாளை 24-05-2009 காலை 10.00 - 1.00 மணிவரை பத்து மலையில் அலையென திரள்வோம். மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு சார்பற்ற பொது இயக்கங்களின் ஆதரவுடன் இந்த ஒன்றுகூடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துணிந்து வாருங்கள்; குடும்பத்தோடு வாருங்கள்; நமது தார்மீக ஆதரவை போரில் பாதிக்கப்பட்டு அவதியுறும் மக்களுக்கு காட்டும் பொருட்டு திரண்டு வாருங்கள்.

மலேசிய நாட்டு காவல்துறையினரின் அச்சுறுத்தல்களும் கயவர்களால் கட்டவிழ்க்கப்பட்ட வதந்திகள் அதிகம் பரவலாம். இந்நாட்டு காவல்துறை என்றுதான் நடுநிலையாக நடந்து கொண்டிருக்கிறது? அச்சுறுத்தல்களை களைவது விடுத்து அச்சுறுத்தல்களை பரப்பிவிடுவதே கடந்த காலங்களில் அவர்களின் சாதனைகளாக நாம் பார்த்திருக்கிறோம். இம்முறையாவது வெந்த புண்ணில் வேலைப் பாச்சமாட்டார்கள் என நம்புவோம்.

வாருங்கள்; நம் உறவுகள் உடலறுந்து, உடை இழந்து, உணவிழந்து, உறக்கம் இழந்து தவிக்கின்றது. உங்களுக்கும் இது நேரலாம். அரசியல் வேற்றுமைகளை புறந்தள்ளுங்கள்; ஒன்றிணைந்து குரல் கொடுங்கள்.


SUNDAY 24 MAY 2OO9 - BATU CAVES - TIME 10.00 AM TO 1.00 PM